சமத்துவக்காசு

தங்க. வேல்முருகன்

0
97

கருணை உள்ள மனிதனிடம்
இருந்தால் காசு
அது இல்லாத மனிதனிடம்
இருந்தால் வெறும் தூசு.

இல்லாத மனிதர்களிடம் சென்று
உன்னைக் கொஞ்சம் வீசு
தள்ளாத மனிதர்களிடம் கொஞ்சம்
கையில் கொடுத்துப் பேசு.

பகிராது இருப்பதினால்
பதறவில்லையா உன் நெஞ்சம்
உயர்ந்த உள்ளம் உன்னால்தான்
குறைக்கமுடியும்
வறுமையாளனின் பஞ்சம்.

தாழ்ந்து கெஞ்சும் வாடும் தவழும்
ஏழைக்குள் புகுந்து மூச்சாய் பேசு
ஏழை வலியுணர்ந்து எல்லோருக்கும்
பகிர்ந்திடுவாய் சமத்துவக்காசு.

தங்க. வேல்முருகன்

Leave a Reply