பங்குச் சந்தை முதலீடு – சூதாட்டமா? அல்லது லாபம் தருமா?

குரு. கோபாலகிருஷ்ணன் MBA

5
1545

‘பங்குச் சந்தை என்பது ஓர் சூதாட்டக்களம்’ என்ற மனநிலை பெரும்பாலான இந்தியர்களுக்கு இருந்தாலும், உலகில் இந்தியா உட்பட அணைத்து நாடுகளிலும் நீண்டகாலமாக பங்குச் சந்தை சட்டபூர்வமாக இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றது.

பங்குச் சந்தை என்பது, நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான தொழில் முதலீட்டை திரட்டிக்கொள்ளும் ஒரு சந்தை ஆகும்.

இந்தியாவில் பங்குச் சந்தையில் ஈடுபடுவோரில் குஜராத்திகள் மிக அதிகம். ஆகையால்தான் குஜராத்திகள் தொழிலதிபராக மிளிர்கின்றனர். தமிழர்கள் சினிமா, அரசியல், கிரிக்கெட், டாஸ்மாக் ஆகியவற்றைக் கடந்து சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே அவர்கள் குடும்பங்களுக்கு வளத்தை உருவாக்க முடியும்.

இன்றய உலகில் மனிதர்களுக்கு பணம் மிக முக்கியமானது. பணத்தை சம்பாதிப்பதற்காக கல்வி, தொழில், வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டாலும், சிலர் மட்டுமே அதில் வெற்றியாளராக உள்ளனர்.

பொதுவாக சேமிக்க வேண்டும் என்று சொல்லப்படுகின்றதே தவிர, சேமிப்பு – முதலீட்டை எப்படி எங்கு மேற்கொள்வது என்று அனைவருக்கும் சொல்லிக்கொடுக்கப்படுவதில்லை.

தொழில்முனைவோர் மற்றும் நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை பெற மற்றும் அதிகரிக்க தங்கள் நிறுவன பங்குகளை விற்பனை செய்கின்றன. முதல் முறையாக பங்கு வெளியிடும் நடவடிக்கை IPO (Initial Public Offer) எனப்படும். இந்தப் பங்குகளை சந்தையில் வாங்கி விற்கும் நடவடிக்கை Secondary market நடவடிக்கையாகும். இந்தப் பங்குகளை வாங்க, விற்க மற்றும் பராமரிக்க, இந்தியாவில் The Securities and Exchange Board of India (SEBI) அமைப்பின் அங்கீகாரத்தோடு BSE (Bombay stock exchange) மற்றும் NSE (National stock exchange) என்கிற அமைப்புகள் இருக்கின்றன.

BSE மற்றும் NSE ஆகியவற்றில் பதிவுபெற்ற Stock Brokers மூலம் பங்குகளை வாங்க விற்க முடியும். இதற்கு அடிப்படையான தேவை; 1) வங்கி கணக்கு, 2) ட்ரேடிங் அக்கவுண்ட், 3) டீமேட் அக்கவுண்ட்.

டீமேட் அக்கவுண்ட் தொடங்க நம் அருகினில் இருக்கும் Stock Brokers நிறுவனத்தைத் தொடர்புகொண்டாலே அனைத்தையும் செய்துகொடுப்பார்கள்.

ஓர் பங்கை எப்போது வாங்க வேண்டும், எப்போது விற்க வேண்டும் என்பதை அறிந்துகொண்டு செயல்படுவது மட்டுமே நம் வேலை. இதற்கு இணையதளத்தில் பல கட்டுரைகள், YouTube காணொளிகள் இலவசமாக கிடைக்கின்றன.

“தின வர்த்தகம், குறுகிய கால வர்த்தகம், நீண்டகால முதலீடு” என்கிற அடிப்படையில் பங்குகளை வாங்கலாம். இதில் குறுகிய கால வர்த்தகம் மற்றும் நீண்டகால முதலீடு செய்யும் போது லாபம் ஈட்ட அதிக வாய்ப்புள்ளது. பங்குச் சந்தை ‘பணவீக்கத்தை’ கடந்து லாபம் தரக்கூடியது. தயக்கத்தை துறந்தால் அனைவரும் எளிதில் கற்றுக்கொள்ள கூடியதே.

பங்குச் சந்தையை அடிப்படையாக கொண்டு ‘Future & Option Trading’ என்பதும் நடைபெறுகின்றது.
தமிழர்கள் அனைவரும் பங்கு சந்தையில் பங்கெடுக்கவேண்டும். தொழில்வளம், நம் குடும்பத்தை மட்டுமல்ல தமிழ் சமூகத்தையும் முன்னேற்றும்.

குரு. கோபாலகிருஷ்ணன் MBA

குறிப்பு: இந்த கட்டுரையைப் போன்ற ஆக்கச்செழுமையான படைப்புகளைத் தொடர்ந்து படிக்க, தமிழ்விங் தளத்தின் Facebook மற்றும் Twitter பக்கங்களை லைக் செய்யுங்கள். விரைவில் பயனுள்ள காணொளிகளை தமிழ்விங் தளம் வெளியிட இருப்பதால், இதன் YouTube பக்கத்திலும் சப்ஸ்கிரைப் செய்து உங்களது ஆதரவினை நல்குங்கள். உங்களது தொடர்ந்த ஆதரவானது, தமிழ்விங் தளத்தில் பல நல்ல படைப்புகள் வெளிவர உதவும். மிக்க நன்றி.

5 COMMENTS

  1. Really a Good article about the Share market. I am the beginner of the stock market I am still learning I hope that you will continue the post regarding the Share market!

    • தங்களது மேலான கருத்துக்கு நன்றி. தொடர்ந்து தமிழ்விங்.காம் தளத்தின் ஆக்கங்களைப் படித்து, உங்களது கருத்துக்களைப் பகிருங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.

  2. உங்கள் பங்கு சந்தை சார்ந்த பதிவுகளை விரும்பி வாசிக்கிறேன். நிறைய கற்றுக் கொள்ள முடியும் என நம்புகிறேன்.

    • தங்களது மேலான கருத்துக்கு நன்றி. தொடர்ந்து தமிழ்விங்.காம் தளத்தின் ஆக்கங்களைப் படித்து, உங்களது கருத்துக்களைப் பகிருங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Leave a Reply