தன்னம்பிக்கை

தங்க. வேல்முருகன்

0
654

நம்பிக்கை நாற்றெடுத்து
நாள்தோறும் நட்டுவிட்டு
முயற்சி நீரைப் பாய்ச்சிவந்தால்
விளைச்சலுக்கு ஏது பஞ்சம்

தன் கையே தனக்குதவி எனும்
நம்பிக்கை உன்மீது வை
நாடி வருவோருக்கும் நல்லுதவி
செய்

அவன் சொல்வான் இவன் சொல்வான்
இது முடியாதென்று!
நீ சிந்தித்து வெற்றிக்கொள்வாய்
எதிர்த்து நின்று!

உயர்ந்தவரே உயரணும்
என்பவர்கள் எண்ணம் கண்டு
அதில் விலகி செய்திடுவாய்
நல் அருமைத் தொண்டு.
உனக்கு மாபெரும் வெற்றி
மிக அருகில் உண்டு.

தங்க. வேல்முருகன்

Leave a Reply